கிளிநொச்சியில் நபரொருவர் வெட்டிக் கொலை!

கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் நபரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (13.02.2023) பதிவாகியுள்ளது. இதன்போது ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மூவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.